உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

கட்டைவிரல்…!!

1. ஊர் எல்லையில் மக்களைக் காத்து
குலதெய்வமாய் வீற்றிருக்கிறாள்
கூரையற்று தீப்பாஞ்ச அம்மன்.

2. துரோணர் இறுதி மூச்சு
நாசியைத் தொட்டு விலகுகிறது
ஏகலைவன் கட்டைவிரல்.

3. மகள் திருமணத் தாலி
பூசையில் வைத்து வணங்கினாள்
குலதெய்வம் உத்தரவு கேட்டு…

4. எல்லையம்மன் உக்கிர உருவம்
இளமையில் பார்த்து பயந்தது
இன்றும் குலதெய்வ வழிகாட்டி.

5. காத்து கருப்பு அண்டாமல்
கன்னிமார்களுக்கு மாவிளக்கு போட்டாள்
நோயால் குழந்தை பலி கொடுத்த தாய்.

👁 1 வாசிப்பு ☰ 15 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ந க. துறைவன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (1)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.

  1. Thuraivan NG · 2478 நாள் முன்

    கட்டை விரல் மற்றும் சில கவிதைகள்
    கவிக்கூடு – இல் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.

    ந க துறைவன்.