நீதானே என் பொன்வசந்தம்
தீக்கங்குகளுக்கு மத்தியில்
அகப்பட்டுக்கொண்ட
சிற்றெரும்பாகிறேன்.
உன் வாசனையில்லாப் பிரபஞ்சம்
அழியத் தொடங்கிவிட்டது.
கடைசி மனிதனின்
அழியாக் குறிப்புகளை
நானே எழுதுகிறேன்.
விரிந்த கண்களில்
பூமிப்பந்து
வகிடாய்ப் பிளந்து எரிய
கருந்துளை
உறிஞ்சித் தொலைத்துவிட்ட
என் நெஞ்சுக்குழியின் ஈரத்திற்கு
இனிப்புச்சுவை.
சிலநேரங்களில்
கரிப்புச்சுவை.!
💬 கருத்துகள் (0)