உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டுவிரல்

தலைப்பு- சுட்டு விரல்

அறியாமை என்னும் இருள் நீக்கி;
அறிவொளி என்னும் அகல் விளக்கேற்றி;
அரியாசனத்தில் அமர வைத்தது அச்சுட்டு விரல்!

ஏட்டில் எழுத கற்றுக் கொடுத்த அந்த விரல்;
ஏற்றம் கொண்டு சாதனை படைக்க வைத்த விரல்;

ஈடு இணையற்ற கல்விச் செல்வம் குறையாது
அள்ளித் தந்த கருணை உள்ளமே குருவே!

எழுத்தாணி கை பற்றி கற்றுத் தந்தாய் !
ஏற்றுமிகு வாழ்விற்கு வழி வகுத்தாய்!

துளி கூட நஞ்சில்லா நெஞ்சம்
நாங்களே தஞ்சமென எங்கள் வாழ்வு தழைக்க செய்த நல் உள்ளம் ஆசானே!

அரியாசனத்தில் நாங்கள் அமர அயராது எங்களை கரையேற்றிய உங்கள் பெருமை என்றும் போற்றுவோம்! பறைசாற்றுவோம்!
-பிரியங்கா.பா
மதுரை.

👁 12 வாசிப்பு ☰ 15 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.