உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

ஆசிரியை என்னும் அன்புத்தாய்

வகுப்பறைக்குள் நுழைந்திடும் அன்புத்தாய்,
எங்கள் வாழ்வில் ஒளிதரும் விண்மீனாய்!
அறிவை மட்டும் புகட்டும் ஆசிரியை அல்ல,
எங்கள் குணத்தை வளர்க்கும் அன்னையல்லோ!

தவறு செய்யும்போது கண்டிக்கும் அதிகாரம்,
நாங்கள் சோர்ந்துபோனால் தாங்கிடும் அன்புக்கரம்!
பெற்றவர் போல எங்களை உரிமையோடு திட்டுவார்,
எங்கள் நலம் விரும்பி நெஞ்சார வாழ்த்திடுவார்!

படிப்பைத் தாண்டி விளையாட்டிலும்
ஈடுபாடு கொள்ளச் செய்வார்,
பயத்தைப் போக்கி எங்களை என்றும்
முன்னேறச் சொல்வார்!

ஓடி ஆடி வெல்லும் திறனை எமக்குள் விதைப்பார்,
தோல்வி நேரினும் அன்போடு எமக்குத் தோள் கொடுப்பார்
கலையினில் உயர மேடை ஏற்றி மகிழ்வார்,
எங்கள் திறமைகளைக் கண்டு கண் கலங்கி நெகிழ்வார்

படிப்பிலும் விளையாட்டிலும் எங்களைச்
செதுக்கும் அன்னை,
என்றும் எங்களை வழிநடத்தும் எங்கள்
வாழ்வின் நல் துணை!

👁 13 வாசிப்பு ☰ 20 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

நந்தனா ஸ்ரீ.ஆ அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.