அம்மா -என் முதல் காதல்
என் முதல் அழுகைக்கு தா லாட்டா வந்தவள் நீ…
என் முதல் நடைக்கு விரலாய் பிடித்தவள் நீ…
நான் விழுந்த ஒவ்வொரு முறையும் என் கால்களுக்கு அல்ல.. வலித்தது உன் இதயத்திற்குதான் அம்மா..
என் கனவுகளுக்காக உன் கனவுகளைத் தொலைத்தவள் நீ…
என் சிரிப்புக்காக உன் கண்ணீரை மறைத்தவள் நீ…
உலகமே என்னை விட்டு சென்றாலும்,”நான் இருக்கிறேன்” என்று என் உயிரோடு நிற்பது நீ…
என் வாழ்க்கையில் கிடைத்த மிக அழகான வரம்- நீயே அம்மா!
💬 கருத்துகள் (0)