அம்மா நூலோடு அலைகிறாள்
1996-ல்
டிப்ளமோ கூட்டுறவு முடித்திருந்த
அம்மாவின் கல்லூரி விண்ணப்பத்தை
ஒளித்துவைத்து —
அவள் கனவுகளை
சிதைத்தவர் அப்பா.
அதைத் தெரிந்தும்
அவரையே காதலித்துத்
திருமணம் செய்துகொண்டதிலிருந்தே
புரிந்துகொண்டேன்.
காதலுக்கு,
கண் மட்டும் அல்ல;
சில சமயங்களில் அறிவும் இல்லை!
சுயநலத்திற்குத்
தந்தையிட்ட பெயர் —
காதல்!
கத்தரிக்கப்பட்ட சிறகுகளை
எவ்வாறு தைப்பதென்று தெரியாமல்
நூலோடு அலைகிறாள்
தன் கனவுகளின் தெருக்களில்!
💬 கருத்துகள் (0)