அம்மாவின் ஏக்கம்
அம்மா சொல்லிய
ஒரு வார்த்தையால்
உறங்காமல்
விழித்திருந்தேன்…
உன்னை கவனிக்க
யாரு இருக்க….
உயிரைப் பிடித்து
வைத்திருக்கிறேன்…
உனக்காக
யாருமில்லையென்று…
நான் இருக்கும்
வரைக்கும் தான்
எல்லாமே உனக்கு….
நான் போன
பிறகு தான்
புரியும் உனக்கு….
அரும்பாடுபட்டு
வளர்த்தேன் உன்னை ….
யாரிடத்தில் விட்டுசெல்லுவேன்
என் கண்மணியை…
💬 கருத்துகள் (0)