வாழ்வு ஒளிர வழிகாட்டலுக்காய் வழிகாட்டியை தேடி
வாழ்வு ஒளிர வழிகாட்டலுக்காய் வழிகாட்டியை தேடி
திக்கற்று திரிந்தவளாய் நான்
வாழ்வானது பிரபஞ்சத்தின் வழி இத்திக்கற்று திரிந்தவளை
வழி பிடித்துச் செல்வதற்காய் இளவளியாய் வலிமையானை அனுப்பியது! பிரபஞ்சமானது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இயன்ற நல்வகையை செய்யும் அவ்வாறு இத்திக்கற்றவளுக்கு
வழிகாட்ட பிரபஞ்சம் வழி அனுப்பிய எளிமையின் உருவம் அவன்! நித்தமும் “படி” எனும் பதம் கொண்டு எனை பதம் செய்தவன் அவன்! சில வேளையில் திரிபு கெரியின் அதைத் தன் நீதி எனும் சுட்டுவிரலால் சுட்டிக்காட்டி தன்மை செய்வான்
அவனின் உச்சத்தை பெரிதாய் கருதாது
என் உச்சத்தைக் காண அவாவோடு காத்திருப்பவன் அவன்
அவனின் நீதி எனும் சுட்டுவிரல் சுட்டு களையை அகற்றி
தீயாய் ஒளிர்ந்து எனையும் இப்பிரபஞ்ச விளக்கில் ஒளிர வைக்கும்
இதற்கு அவனின் ஆசு இரியன் எனும் தன்னலமின்மையான நீதி எனும் சுட்டுவிரலே சுட்டிக்காட்டி சாட்சியாகும்!!
💬 கருத்துகள் (0)