உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அறையின் கதவுகளை

அறையின் கதவுகளை
நானே திறக்கிறேன்.
உடமைகளை அவள் விரும்புவதான இடங்களிலேயே
அடைக்கலப்படுத்திவிட்டு
வெறுமை நிரம்பி வழியும்
கூடத்தைக் கடந்து
அவளின்
வாசனைக் கெட்டித்துக்கிடக்கும்
சமையலறையின் முனையில் நின்று
மூச்சிழுத்து
நுரையீரலைச் சுத்தப்படுத்திக்கொள்கிறேன்.
என்னை வந்து மோதுமவள்
பிம்பங்களை உடைத்து
முகம் கழுவி
காற்றுக்கு நகர்கிறேன் பின்பு.
எப்போது வருவாள்.?
முத்தங்கள் சருகாகிவிட்டன.!

👁 1 வாசிப்பு ☰ 17 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.