திருவிழா…
உன் வாசனை பரவும் வீதிகள்
அலங்கரிக்கப்பட்டிருந்தன.
நீ வரப்போவதை
அறிவித்துவிட்ட மகிழ்ச்சியில்
காற்று துள்ளிக்குதித்தது
இதயத்துள்ளிறங்கி!
தேவதை இல்லாமல் திருவிழா ஏது?
பொய்யாக்காமல் வந்திருந்தாய்..
உன் அழகின் கொண்டாட்டத்தில்
மெய் மறந்து தொலைந்து போயிருந்தேன்
விரல் சூப்பும் குழந்தையாய்!
💬 கருத்துகள் (0)