சில்லிடும் உன் தேகத்தை
சில்லிடும் உன் தேகத்தை
எனக்குச் சொல்லிடும் வேகத்தில் வந்து
சாரல் பூசிப்போய்விட்டாய்.
தாழப் பறந்திடும் செந்நாரை விரட்டி
கூடுசேர்ப்பிக்கும்
மழையின் கதகதப்பிலிருக்கிறேன்.
பொருள்வயின் பிரிந்தயென் தலைவ
உன் குழந்தமையை
கொஞ்சிக் களிக்க வேண்டும்
உயிர்வயின் எப்போது வருவாய்?
தனிமைப் பூத்துக் காய்த்துக் கனிந்து
நறுமணம் பரப்பிக் கிடக்கிறது.!
💬 கருத்துகள் (0)