உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மிக நீண்ட தூரங்களைக்

மிக நீண்ட தூரங்களைக்
கடக்க வேண்டியிருக்கிறது.
வாசனை மிதக்குமுன்
மூச்சுக்காற்றையும்
இரவுகள் நிறைக்குமுன்
கனவுகளையும்
இளைப்பாறுதலுக்குக் கொஞ்சம்
பொதிந்துகொள்கிறேன்.
கண்களை மூடுவதிலும்
திறந்துகொள்வதிலுமுனக்கு
கவனமிருக்கட்டும்.
நீதானென் ஆதியும் அந்தமும்.!

👁 1 வாசிப்பு ☰ 12 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.