உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டுவிரல்

கண்டாலே புடிக்கல…
எப்ப பாரு என்னதான் அடிப்பாரு….
அங்கபோ இங்கபோன்னு
வேலை சொல்லுவாரு…. படிக்கலன்னு பாடாபடுத்துவாரு…
அப்பலாம் பாக்கவும் கேட்கவுமே புடிக்காத பேரு தான் அவரு பேரு …
இப்ப இங்கிலாந்துல மருத்துவச்சியா இருக்குற நானு….
எதுத்தாப்புல உட்காந்து பேசுற நோயாளிக்கு மருந்து எழுத பேரு கேக்குறேன் கம்முன்னு சொல்லுறாரு
“சண்முகம் சார்னு”…
ஆமா என்ன அடிச்சு,, பாடா படுத்தி,, “புள்ள டாக்டரு ஆயிருவா படிக்க வை பரமசிவான்னு” எங்க அப்பாட்ட சண்டை போட்டாரு சண்முகம்சாரு… “டாக்டராகிரு புள்ள”னு சொன்னது அந்த மனுசன்தே…
புடிக்காத அந்தபேரு தான் இப்பலாம் கேக்கும்போதே கண்ணீர் வருது…

சண்முகம் வாத்தியாரு…

ஆசிரியர் தின வாழ்த்துகள்…அப்பா அம்மாக்களிடம் மாணவர்களுக்காக மல்லுக்கட்டும் வாத்தியார்களுக்கு…

👁 23 வாசிப்பு ☰ 12 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சீதாலட்சுமிவெங்கட் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.