உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

வான்மழையும் உள்ளமழையும்

வானிலிருந்து பொழியும் மழையானது,
மண்ணை நனைத்து உயிர் கொடுக்கிறது;
ஆனால், மனிதன் உள்ளே பொழியும் மழையானது,
பல தலைவர்களை உருவாக்குகிறது.

மண்ணில் விழும் மழைத்துளி
விதையைத் தழைக்கச் செய்கிறது;
மனதில் விழும் மழைத்துளி
விடியலைப் பிறக்கச் செய்கிறது.

வான்மழை பூமியைப் பசுமையாக்கும்,
உள்ளமழை மனிதனைப் புதுமையாக்கும்;
ஒன்று நிலத்தை வளமாக்கும்,
மற்றொன்று தலைமுறையை வளமாக்கும்.

மழை பொழியும் போது
மண் மணம் வீசுகிறது;
மனம் பொழியும் போது
மனிதநேயம் வீசுகிறது.

வானிலிருந்து வரும் மழை
உயிர்களை வளர்க்கிறது;
மனித உள்ளத்திலிருந்து வரும் மழை
உணர்வுகளை வளர்க்கிறது.

அந்த மழைத்துளிகளில்
சில விதைகள் மரங்களாகின்றன;
அந்த மனத்துளிகளில்
சில மனிதர்கள் தலைவர்களாகின்றனர்.

மழை நின்றாலும்
மண்ணின் பசுமை தொடரும்;
கண்ணீர் நின்றாலும்
மனிதனின் கனவு தொடரும்.

வானம் பொழியும் மழை உலகை வாழ வைக்கிறது;மனிதன் பொழியும் அன்பு உலகை மாற்றி அமைக்கிறது.
– கு.ரிச்சிகா ஶ்ரீ

👁 10 வாசிப்பு ☰ 30 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரிச்சிகா ஸ்ரீ . கு அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.