பொருள்வயின் பிரிதல்..
நேத்தி போல இன்னைக்கும்
ஊருக்குப் போவேணாம்பா’ என்ற
மூத்தமகனின் தலைகோதி
என்முகமறிந்து முதன்முதலாய்த் தூக்கச்சொல்லிக் கைகளை உயர்த்தும்
இளையவனின் உச்சிப்பொட்டில் முத்தமிட்டு
வாழ்வைத் தொலைத்த துக்கம்
தொண்டையில் தூண்டில் முள்ளாய்ச்
சிக்கிக் கொள்ள
ஆளுக்கொரு முத்தமென
சூசகமாய்ச் சொல்லும் சத்யாவிடம்
விடைபெறத் திரும்புகையில்
நீர்க்கசியும் கண்களால் சொல்கிறாள்
‘செல்லாமை உண்டேல் எனக்குரை’.
💬 கருத்துகள் (0)