உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சிறகுமுளைத்த பனித்துளி

போதையின் சிறகுகளைப் பற்றிக் கொண்டு
கீழிறங்குகிறது வானம்
இரவைத்தெளித்து நிலவை வரவேற்கும்
பூமியின் வாசலில்
நட்சத்திரப் புள்ளிகளிடையே
மின்னல்கள் இட்ட கோலத்தில்
நீர்மலர் தூவி மழைத்த மேகத்தைத்
தேடியலையும் காற்றின் பெருமூச்சில்
மரங்களின் தவம் களைகிறது.
கூடுவிட்டேகும் பறவைகளின் ஓசையில்
துயிலெழுந்த சூரியனிடம்
வானத்தைத் திருப்பியளிக்கிறது
பனித்துளி.

👁 1 வாசிப்பு ☰ 13 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

க. தமிழ்வாணன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.