அவள் எனும் மாயை
போர் ஏதுமே போடாமலே வீழ்த்தினாய் வீழ்கிறேன், கண்ணோரப் பார்வையால்,
பேசாமலே நான் போனாலும் போகிறேன், வார்த்தைகள் உன்னோடு தான், கண்ணோடு தான்,
கை சேராத எண்ணங்கள் எப்போதுமே கண்முன்னே அலைவீசி சிரிக்கின்றதே, ஒரு நிழல் போலே நான் உன்னை தொடக் கொஞ்சம் பார்த்தாலும், மனமே நீ என்னை துரத்தாதே,
காலோடு பேசும் கொலுசோட ஒலியே தடம் மீறி என் காதில் கேட்காதிரு, நான் கிட்டே நெருங்க அவள் என்னை நொறுக்க, அடங்காத ஆசையே அலைப்பாய்ந்திடு,
ஹே உந்தன் முகம் எந்தன் கண்ணில் பட்டு விழ, உன்னைக் கண்ட அந்தி வேலை இல்ல, காலம் போகும் நேரம் ஆகும் காதல் சேராதே மாயை கூட,
போதும் போதும் உலகில் நாமும் வேஷம் என்றால் இங்கே காதல் இல்ல…
💬 கருத்துகள் (0)