நான்
வெண்ணிற இரவில் பொன் ஒன்றைக் கண்டேன்,
இரத்தத்தில் குளித்த பொன் ஒன்றைக் கண்டேன்,
ஈமச்சடங்குகள் ஏதுமில்லை இருட்டுக்குள் வாழும் பொன் ஒன்றைக் கண்டேன்,
இரத்தக்கறை கொண்ட கரங்கள் கண்டேன்,
இரத்தினமாய் மிளிர்ந்த பொன் ஒன்றைக் கண்டேன், கண்ணாடிக்குள் என்னையே நானே பொன்னாகக் கண்டேன்,
பிண்டத்தின் எச்சில் இலை எனக் கண்டேன்,
குப்பையில் மிதந்த பொன்னாக கண்டேன்,
எழுத்துக்களை கூட்டி கூட்டி பொன்னான என்னைப் படித்துக் கண்டேன்…
💬 கருத்துகள் (0)