பறந்து போக போகிறோம்
அலைகடலென நீ ஆர்ப்பரித்து போகிறாய், படபடவென என் பாவி நெஞ்சை கொய்கிறாய், நிழலென உடன் நானும் செல்கிறேன், உடல் பொருள் எல்லாம் உனக்கே தான் துறக்கிறேன்,
பார்வை பார்க்காதே, பாதை மாறாதே, பாசம் வேஷம் என்றும் ஆகாதே, கைகள் கோர்க்காதே, கண்ணால் பேசாதே, காலம் மீலாதே, காதல் காட்டாதே,
வா அருகினில் வா அணைத்திட வா அலைகடலே…
வா அமுதென வா அன்புடன் வா அலகியலே,
போர்களம் உன்னுடன் சென்றால் பூக்காட்டை காணவில்லை, பூகம்பம் உன்னுள் வந்தால் என்னை தேடாதே,
சாலைகள் உன் பெயர்க் காட்டி உன்னை என்னில் மீட்டெடுக்க, மார் சாய்ந்து இசையினை கேட்க மாய்கின்றேன் நான்,
ஆடைப் பார்க்காதே, ஆசை சேர்க்காதே, கன்னம் கிள்ளாதே, காதல் பேசாதே,
பார் பறவையைப் பார், பறந்திடப் பார், பகல் நிலவே…
பார் உலத்தைப் பார், நமக்கெனப் பார், நன்மடியே…
💬 கருத்துகள் (0)