உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

புது பயணம்

காணல் நீரின் ஓசை சாலை அதை கேட்குமோ, கால்கள் தடுமாறி போக கண்கள் அதை மீட்குமோ, பூவே பூவைச்சூடி காதல் கொண்டு வாழுதோ, அங்கே புற்கள் எல்லாம் பனியில் நீராடுதோ…

மேகமே கீழே வா என்னையும் ஏந்தி போ, சாரலாய் தோன்றி நீ எங்கள் புன்னகை பார்த்து போ, மாறா பெண் மாறா முழு மதியும் இங்குண்டு, வாரா ஊடே வாரா கோப மின்னலை விட்டுடு…

நாங்கள் இருவரும் தெருவினில் நடந்து செல்கிறோம், அவளது கொலுசுக்கு என் யாத்திசையும் சமர்ப்பணம், காற்றிலே கைகளை பறக்க வைத்து சிரிக்கிறோம், நடனங்கள் மனதிலே ஆடி மகிழ்கிறோம்…

இனி தினம் தினம் புது பயணமே மீண்டும் பிறக்கிறோம், புது மணல் புது காற்று, புது சுவாசம் புது உரையாடல், புது நினைவென கூடி நிற்கிறோம்…

👁 9 வாசிப்பு ☰ 4 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.