தெய்வ ஒளி
ஒரு கோப்பை தேநீர் ஒரு துண்டு சிகரெட், சாம்பல் ஆகும் ஆயுள் என போதிக்கிறான் செயின் ஸ்மோக்கர், மின்னல் பட்ட மரத்திடம் முனிவரைப் போல்,
பீட்டரிடம் கோபித்துக் கொள்கிறார் அயோத்தி குல தரகர், ஆற்றங்கரையில் ஓடுவது ஒன்றும் அய்யன் ஏசுவின் இரத்தம் இல்லை என்று,
பள்ளிவாசலில் அமரும் புறாக்களுக்கு ஓய்வே இல்லை, போதனைகளின் ஒலிச்சத்தத்தை அவைகளும் போதிக்க ஆரம்பித்ததோ என்னவோ, எப்போதுமே அவைகளிடம் அப்படி ஓர் அலறல் சத்தம்,
ஓடி திரியும் மனித பிராணிகள் எல்லாம் ஒளியை தேடுகிறது, மின்னல் வெட்டை கண்டும் காணாமலும்…
💬 கருத்துகள் (0)