துழாவிடும் தூரல்
பொதுவாக நானும் விரும்பவே செய்தேன், புதிதாக இன்று குடை கொண்டு நடந்தேன், இலை நுனி சொட்டும் நீரோடு பேசி வெகுகாலம் ஆகியும், மரக்கன்றை ஆட்டி குளிரோடு போனேன்,
தொட்டணைத்து துழாவிடும் தூரலில் தோற்று நின்று நனைகையிலும், குட்டி இன்பம் கண்ணீர் மறைத்து குலாவுகிறது, நான் அகதியாயினும் இரட்டிப்பான ஆனந்தத்தில், மேகத்தினூடே பறக்கிறேன்…
💬 கருத்துகள் (0)