அன்பின் உருவம்
இன்னல்கள் பல கண்டாயே!
பல வலிகளையும் நீ மறைத்தாயே!
பாசமும் நேசமும் உன்சினத்தினுள்ளே !
வேஷமே இல்லை உன் நெஞ்சினிலே!
முதல் காதல் என்தன் மூச்சினிலே!
என்றும் நீ என்தன் பேச்சினிலே!
முத்தமிட்ட அந்த நெடியினிலே!
தாயென்றொலிக்குது என்தன் காதினிலே!
உன்மேல் உள்ள அன்பினிலே! நல்ல கவிதை எழுதினேன் பண்பினிலே!
💬 கருத்துகள் (0)