அருவி
பூமி செழிக்க வந்த வான்மழை.
இயற்கை அன்னையின் வெண்ணிற ஆடை. மக்களின் உடல்நலம் காத்திட மூலிகை கலப்பாய் வந்த மருத்துவர்.
உலகில் மக்கள் இல்லங்களுக்கு ஒளி கொடுக்கும் புனல் மின்சாரம். வெகு தொலைவில் இருந்து விழுந்தாலும் வெள்ளியின் உருவமாய் காட்சி தரும் நன்னீர்.
காண்பதற்கு மகிழ்ச்சியும், உற்சாகமும், தந்திடும் இயற்கையின் அழகு நடனம்.
வற்றாத சுனைகளாய் தாகம் தீர்க்கும் தாய்.
💬 கருத்துகள் (0)