உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டு விரல்

மனிதன் என்பவன் சமூக விலங்கு.
சார்ந்து வாழும் சமூக அமைப்பில் சாதனை படைக்க, சரித்திரம் படைக்க, சஞ்சல மனதை சமன் செய்து, சீராக்கி சமூகத்தில் கண்டும், கேட்டும், பட்டும், சந்தித்த வாழ்வியல் சவால்களை, எதிர்கொள்ள முன்னோர், மூத்தோர்,மொழிந்தஅறங்களை, அமைதியுடன் ஆய்ந்து, அணுகி, அல்லல் நீக்கி, அருள்வழி சென்று, அன்பு, அர்ப்பணிப்பு, மனிதநேயம், சகிப்புத்தன்மை, தியாகம் எனும் பல தெய்வப்பண்புகளை, பெற்று ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் ஏற்றமிகு எண்ணத்தில் மனம் விரிந்து நிற்க வெப்பம், குளிர், தெப்பமாய் அமைய, வேண்டிய உதவிகளை, நாளும் செய்துவிட்டு அறியாமை, வறுமை, தீண்டாமை, வன்கொடுமை, அகற்றிட கல்வி எனும் கருவியால், காலத்தில் மாற்றம் நிகழ்த்தி, யாவரும் நலம் அடைந்திட மன்னுயிர் யாவும் தம்முயிர் என்று எண்ணி மனித வாழ்வின் மகத்துவம் காப்போம்!

👁 15 வாசிப்பு ☰ 2 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரவிராஜன் அவர்களின் மேலும் கவிதைகள்

இயற்கை 2 வாரம் முன்

எண்ண எண்ண இனிக்குது.

0 12
இயற்கை 2 வாரம் முன்

நினைத்தாலே இனிக்கும்

0 11
வாழ்க்கை 2 வாரம் முன்

அய்யன் வள்ளுவர் காட்டும் வழி

0 14
சோகம் 2 வாரம் முன்

செவாலியே தமிழன்

0 13

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.