செவாலியே தமிழன்
நாம் வைத்திருந்த தமிழேட்டில், ஒரு ஏடு மறைந்து விட்டது.
அது மூன்றாம் தமிழ்.
இனி அதற்கு உயிர் கொடுக்க ஆண்டவனே வந்தாலும், நடவாது.
ஏனெனில், மறைந்த அந்த திரை சிற்பியே, கூத்தபெருமானின் அவதாரம் தானே!
தமிழை, தமிழாக பேசிய ஒரே தமிழன் அவனே! ஆனால், இன்று பேசா மடந்தையாய், மௌனம் சாதிப்பது நடிப்பின் திறனோ! ஐயா, உன் பேச்சைக் கேட்டதால் தானே இன்று உலகமே உன்னை காண திரண்டு நிற்கிறது.
காற்றும் நுழையா, கண்ணாடி கூண்டுக்குள்ளே நீ மட்டும் எப்படி நிம்மதியாய் உறங்குகின்றாய்.
நீ பிராணயாமா கற்ற வித்தைக்காரனா?
பாரதி பரம்பரைக்குப் பிறகு உன்னுடைய கன்னல் மொழியால், தான் தமிழர் விழி பெற்றனர். இன்றவர் விழி நீர் பெருகி வர, நீயும் தேவன் திருவடியில் மூழ்கி விட்டாய். நடிப்பின் இமயமே! இனி உன்னை தொட யாரால் முடியும். உன்னுடைய நினைவுகளை எமது நெஞ்சம் தாங்கி, பாசத்திற்கு பஞ்சம் ஏற்பட்டதே என கண்கள் கலங்க, உமது பாதங்களை ஏக்கத்தோடு வணங்கி, வழி தெரியாமல் தன்னைத்தானே தேற்றி கொள்கிறது.
💬 கருத்துகள் (0)