சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் மனிதன் என்பவன் சமூக விலங்கு. சார்ந்து வாழும் சமூக அமைப்பில் சாதனை படைக்க, சரித்திரம் படைக்க, சஞ்சல மனதை சமன் செய்து, சீராக்கி சமூகத்தில் கண்டும், கேட்டும், பட்டும், சந்தித்த வாழ்வியல் சவால்களை, எதிர்கொள்ள முன்னோர், மூத்தோர்,மொழிந்தஅறங்களை, அமைதியுடன் ஆய்ந்து, அணுகி, அல்லல் நீக்கி, அருள்வழி சென்று, அன்பு, அர்ப்பணிப்பு, மனிதநேயம், சகிப்புத்தன்மை, தியாகம் எனும் பல தெய்வப்பண்புகளை, பெற்று ஏழையின் சிரிப்பில் இறைவனை காணு முழுதும் படி → ♥ 0 💬 0 👁 14 🔖
இயற்கை 2 வாரம் முன் எண்ண எண்ண இனிக்குது. பரத கண்டத்தின் தனி பெருவாழ்வே! திராவிடர் தம்மின் உயர்பொருளே!தென் மொழிகளை வளர்த்த தாயே! என் அன்னையர் வழி வந்த தெய்வமே! ஆதியில் இறையனாரும், கீரனாரும், அடுத்து கவிக்கம்பனும், ஒட்டக்கூத்தரும் எக்காலத்தும் அழியா, தமிழ் மறை வள்ளுவன் நடுவில் கவிவலவ சேக்கிழாரும், சிவப்பிரகாசரும், அடுத்து பாரதியும், அவன்தன் தாசனும், இன்று மகாகவி தாசனின் தாசன்கள், இனி என்றும், குறைவில்லா தமிழ் தேன் கண்ணதாசனும், கல்யாணசுந்தரமும் பொழியவரும் க முழுதும் படி → ♥ 0 💬 0 👁 12 🔖
இயற்கை 2 வாரம் முன் நினைத்தாலே இனிக்கும் கம்பநாடனும் வள்ளுவனும் போற்றும் மங்களம் குறைய கன்னித்தமிழே இன்றும் பற்பல போராட்டங்களுக்கு இடையில் அணையா விளக்காய் ஒளி தரும் தீந்தமிழ் மொழியே சங்க காலம் தொட்டு இன்று வரை இணையில்லா இலக்கியச் செல்வங்களை தன்னகத்தே கொண்ட செல்வத்தமிழே! அறிவியல், விஞ்ஞான உலகில் சிறப்பொத்த நூல்களைப் படைத்து, மாந்தர் நின் திருவடியில் பணிவித்தார். காலங்கள் தோறும், நின் பெருமைகள் உலகத்தார் உணர்ந்திட, வழி செய்யும். எங்களின் தண்டமிழ் தாயே நிந்தன் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 11 🔖
வாழ்க்கை 2 வாரம் முன் அய்யன் வள்ளுவர் காட்டும் வழி தெள்ளமுதான, தீந்தமிழில் வள்ளுவன் யாத்த, தமிழ் மறையாம் குறளிதனை, மறுவற கற்று, கற்றபடி ஏற்று, அன்பெனும் அறவழியில் நின்று, இல்லறம் நல்லறமாக செய்திடல் முறையாம். நங்கை தன் நற்குடும்பம் பேணிடல் நாட்டிற்கு தூயதொரு பணியாம். நீதிநெறி வழுவாது, நடுநிலைமை அரசு புரிதல் என்றும் நன்றாம். தீ வழி ஆட்சி செய்யல் சமுதாயக் கேடாம். ஒழுக்கம், வாய்மை தவறாமல் சேர்த்திடும் தேவர் உலகம். என்றே, அறிதல் இன்பமாம். காதலெனும் புனித பண்பதனை காமம் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 14 🔖
சோகம் 2 வாரம் முன் செவாலியே தமிழன் நாம் வைத்திருந்த தமிழேட்டில், ஒரு ஏடு மறைந்து விட்டது. அது மூன்றாம் தமிழ். இனி அதற்கு உயிர் கொடுக்க ஆண்டவனே வந்தாலும், நடவாது. ஏனெனில், மறைந்த அந்த திரை சிற்பியே, கூத்தபெருமானின் அவதாரம் தானே! தமிழை, தமிழாக பேசிய ஒரே தமிழன் அவனே! ஆனால், இன்று பேசா மடந்தையாய், மௌனம் சாதிப்பது நடிப்பின் திறனோ! ஐயா, உன் பேச்சைக் கேட்டதால் தானே இன்று உலகமே உன்னை காண திரண்டு நிற்கிறது. காற்றும் நுழையா, கண்ணாடி கூண்டுக்குள்ளே நீ மட்ட முழுதும் படி → ♥ 0 💬 0 👁 13 🔖
வாழ்க்கை 2 வாரம் முன் மெல்லிசை மேகமே எம் எஸ் வி எளிமையின் உருவே!புன்னகை முகமே! ஏழிசை மன்னனே! ரசிகர்களின் கண்ணனே! உந்தன் இனிய கானமழையில், எங்களை நித்தமும் நனைய வைத்தாய். இன்னிசையால், எங்களை உன் பால் மயங்கச் செய்து, கட்டி வைத்தாய். என்றும் உங்கள் இசை வலையிலே, சிக்கித் தவிக்கும் இன்பத்தையே, எண்ணி எண்ணி ஏங்கி இருந்தோம். காலதேவன் இளைப்பாற, உன் இசை வேண்டுமென்று உத்தரவிட, எங்களைப் பிணைத்திருக்கும் உன் அன்பு வலையறுத்து, கண்ணீர் கடலில் தத்தளிக்க, தேவ விமானத்தில் பறந்து ச முழுதும் படி → ♥ 0 💬 0 👁 10 🔖
தத்துவம் 2 வாரம் முன் வாணி இசை அரசி (M.S.சுப்புலட்சுமி) இசையால் உலகம் யாவையும், உன் வசமாக்கி, எங்கள் செவிகள் சுவைக்க நல்லிசை அமுதம் தந்தாய். முத்தமிழில் இரண்டாம் தமிழ் நீ, கலைவாணியின் திரு அவதாரம் நீ, இசையால் கலையும், பக்தியும் தழைக்கச் செய்த தாய் நீ, தேனினும் இனிய உன் குரல் வளத்தால், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 6 🔖
தத்துவம் 4 வாரம் முன் விடுதலைத் திருநாள் செந்நீர் சிந்தி, தாய்மண் காத்த செயல்வீரருக்கும், கண்ணீர் சிந்தி, அடிமைத்தளை அறுத்த கர்ம வீரர்க்கும் சுகவாழ்வை துறந்து வறுமையை ஏற்ற செம்மல்களுக்கும், அடக்குமுறை ஆதிக்கத்தை அறவழியில் முறியடித்த உத்தமருக்கும், விடுதலை ஒன்றே வாழ்வென்று வீரம் காட்டிய நல்லாருக்கும், நாம் செலுத்தும் நன்றி கடன் என்றே அறிவிக்கும் திருநாள். அந்நிய மோகத்தால், பதவி ஆசையால், அதிகார பலத்தால், தற்புகழ்ச்சி மயக்கத்தால், பரந்த நோக்கின்றி பெருநிதி முழுதும் படி → ♥ 1 💬 0 👁 18 🔖
வாழ்க்கை 4 வாரம் முன் விஞ்ஞான தமிழன் அப்துல் கலாம் ஏழ்மையில் பிறந்து, எளிமையாய் வாழ்ந்து, ஏற்றங்கள் கண்டு, ஏணியாய் திகழ்ந்து, கல்வியால் உயர்ந்து, கனவுகள் நனவாக கடின உழைப்பும், விடாமுயற்சியும், மலர்ந்த முகமும், மாறாத பண்பும், மழலைகள், மாணவர்களின் கனவு நாயகனாய், முன்னோடியாய் விளங்கி, பிறந்த மண்ணுக்கும், பேசிப் பயின்ற மொழிக்கும், மங்காத புகழை சேர்த்தாய். வாழ்நாளில் தான் கொண்ட கொள்கையில் வழுவாமல், சாதி, மதம் கடந்த மனித தெய்வமாய் வாழ்ந்து, உமது லட்சிய விதைகளை பதியவி முழுதும் படி → ♥ 1 💬 0 👁 24 🔖
இயற்கை 4 வாரம் முன் அருவி பூமி செழிக்க வந்த வான்மழை. இயற்கை அன்னையின் வெண்ணிற ஆடை. மக்களின் உடல்நலம் காத்திட மூலிகை கலப்பாய் வந்த மருத்துவர். உலகில் மக்கள் இல்லங்களுக்கு ஒளி கொடுக்கும் புனல் மின்சாரம். வெகு தொலைவில் இருந்து விழுந்தாலும் வெள்ளியின் உருவமாய் காட்சி தரும் நன்னீர். காண்பதற்கு மகிழ்ச்சியும், உற்சாகமும், தந்திடும் இயற்கையின் அழகு நடனம். வற்றாத சுனைகளாய் தாகம் தீர்க்கும் தாய். ♥ 0 💬 0 👁 19 🔖
தத்துவம் 4 வாரம் முன் நூலகம் அறிவின் ஆலயம். கல்வியின் விரிவானம். நூல்களின் அற்புதக் காட்சி அணி வரிசை. துறைரீதியான பல்வகை காட்சி சாலை. உற்ற தோழனாய் உலவிடும் நூல்கள், மனதைச் செம்மைப்படுத்தி, விரிவடைய காரணமாய் விளங்கிடும் மந்திரச் சாவி. மனிதர் இடையே சமத்துவம் போற்றிட உதவி, மனித நேயம் சிறந்து விளங்கிட இடமாகி, வாழ்வியல் தத்துவங்களை இதமாய் இயம்பி இன்பம் காணும் இல்லமாகும் நூலகம். ♥ 0 💬 0 👁 20 🔖
இயற்கை 4 வாரம் முன் கடல் வானின் சாயல் தந்திடும், மீனவர் வாழ்வின் ஆதாரம். பல்லுயிர் வாழும் புகலிடம். முழுதும் படி → ♥ 0 💬 0 👁 19 🔖