உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

வாணி இசை அரசி (M.S.சுப்புலட்சுமி)

இசையால் உலகம் யாவையும்,
உன் வசமாக்கி, எங்கள் செவிகள் சுவைக்க நல்லிசை அமுதம் தந்தாய்.
முத்தமிழில் இரண்டாம் தமிழ் நீ,
கலைவாணியின் திரு அவதாரம் நீ,
இசையால் கலையும், பக்தியும் தழைக்கச் செய்த தாய் நீ,
தேனினும் இனிய உன் குரல் வளத்தால்,
உலகத் தலைவர்களை அடிமை கொளச் செய்தாய் செய்தாய்.
மக்களை வேற்றுமை மறந்து ஒன்றுபடச் செய்தாய்.
பூவுலகில் உன் இசை பாடலினால், பூரிப்படைந்த இறைவன் உன்னை தன்னருகில் வைத்து,
சீராட்ட எண்ணி,
எங்களை கண்ணீர் கடலில் தவிக்க விட்டு விட்டாய்.
இதுவரை மானிடரை மகிழ்வித்த நீ,
தேவர் உலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த, எங்களை துயரத்தில் ஆழ்த்தினாயோ! ஏழிசை அரசியே! நீ மறைந்தாலும், உன் இனிய பாடல்கள் என்றும், எம் உள்ளங்களில் மறையாது வாழ்ந்திருக்கும்.

👁 7 வாசிப்பு ☰ 13 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரவிராஜன் அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன்

சுட்டு விரல்

0 15
இயற்கை 2 வாரம் முன்

எண்ண எண்ண இனிக்குது.

0 13
இயற்கை 2 வாரம் முன்

நினைத்தாலே இனிக்கும்

0 12
வாழ்க்கை 2 வாரம் முன்

அய்யன் வள்ளுவர் காட்டும் வழி

0 15

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.